மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : அருவிகளில் நீராட படையெடுக்கும் மக்கள்

தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : அருவிகளில் நீராட படையெடுக்கும் மக்கள்
x
தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம்  அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெப்பத்தை தணிக்க வந்தவர்கள், அருவியில் நீராடி மகிழ்ச்சியுடன் செல்வதாக அப்பகுதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே,பாபநாசம் அகஸ்தியர்  அருவிக்கு செல்லும் வன சோதனை சாவடியில்,  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளதா என  தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை  6 முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்