4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில எல்லைகளில் நக்சலைட் ஊடுருவலை தடுப்பது, கண்காணிப்பது மற்றும், நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தமிழ்நாடு டி.ஜி.பி., ராஜேந்திரன், கர்நாடகா டி.ஜி.பி., நீலமணி ராஜூ, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி., சுந்தரி ரத்ரா, கேரள டி.ஜி.பி., லோக்நாத் பாக்ரா ஆகியோருடன், 4 மாநிலங்களை சேர்ந்த 36 காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
Next Story