புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை
x
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால்  அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள புலியூர், கோம்பை, குறிஞ்சி நகர் பகுதிகளில்,  கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதன் காரணமாக வில்பட்டி பகுதி முழுவதும் காற்றில் சாம்பல் பறந்து வருவதால் வாகன ஓட்டுனர்களுக்கு  சிரமம் ஏற்பட்டுள்ளது.  வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில்,  வனப்பகுதிகளில் தீ மேலும் பரவும் அபாயம் உள்ளதால், கூடுதலாக தீ தடுப்பு குழுவினரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்