விமானத்தில் தங்கம் கடத்தல் : மலேசிய பெண் கைது
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பெண்ணிடம், ஒரு கிலோ தங்க சங்கிலியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த ஃபெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண்மணி, தனது உடைமைக்குள், 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 040 கிராம் தங்கச்சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நகையை பறிமுதல் செய்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story