திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்

திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்
x
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வழக்கறிஞர் தொழிலில் ஐந்து வருட அனுபவத்திற்கு குறைவாக இருக்கும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜீயாவுதீன் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் சென்னை சஞ்சையன், வழக்கறிஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்