மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
x
தலைமைச்செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ இன்பதுரை, தி.மு.க சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் உள்பட ஒன்பது கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து கருத்து கேட்பது, மக்களவை பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்