நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி
சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி பிளேடால் கழுத்தை அறுத்தைக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது சிறைக்காவல் முடிவடைந்ததால் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிபதி முன்பு சவுந்தரராஜன் ஆஜர்படுத்தப்பட்ட போது திடீரென தன் சட்டைப் பையில் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்திக் கொண்டார். அப்போது மயக்க நிலையில் இருந்த சவுந்தரராஜன், சிறையில் போலீசார் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக கூறினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Next Story