காவல்நிலையம் முன்பு டிக்-டாக் - இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்நிலையம் முன்பு டிக்டாக் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இனாம் கரிசல் குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்ற இளைஞர், வன்னியம்பட்டி காவல்நிலையம் முன்பு டிக்-டாக் ஆப் மூலம் நடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டிக்-டாக் செயலியை தடை செய்யவேண்டும் என்று அமைச்சர் மணிகண்டர் உள்ளிட்டோர் வலியுறுத்திவரும் நிலையில், இதுபோன்ற கைதுகள் அந்த கருத்துகளுக்கு வலு சேர்த்து வருகின்றன.
Next Story