கொள்ளிடம் புதிய பாலத்துக்கு ஆபத்து?
பழைய பாலத்தை அப்புறப்படுத்தக் கோரிக்கை
திருச்சி மாவட்டம் சமயபுரம் கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தால், 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். பழைய பாலம் ஸ்திரத்தன்மை இழந்து, தூண்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கையாக, பழைய பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்
Next Story