உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

கண் திறந்து பாருங்க அங்கிள், நாங்க வந்திருக்கோம் டிரைவரின் உடலைப் பார்த்து அழுத பள்ளி குழந்தைகள்
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்
x
தஞ்சாவூர் சுங்காந்திடல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிர்வேல், குழந்தைகளை பள்ளியில் விட்டு, அழைத்து வரும் பணியினை செய்து வந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், மாற்று ஆட்டோ ஓட்டுநரை பணிக்கு வைத்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கதிர்வேல் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த அவரது ஆட்டோவில் செல்லும் குழந்தைகள், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தங்களது பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் அனைவரும்  கதிர்வேலின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது

Next Story

மேலும் செய்திகள்