இந்து கடவுள்களை விமர்சித்த விவகாரம் : தம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பாரதிராஜா மனு
இந்து கடவுள்களை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பட விழாவில், இயக்குநர் பாரதிராஜா, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா மனுத் தாக்கல் செய்தார். அதில், உள்நோக்கத்துடன் பேசவில்லை எனவும், அரசியல் சாசனம் வழங்கிய கருத்து சுதந்திர அடிப்படையில் தன் கருத்தை பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வடபழனி காவல் ஆய்வாளர் மற்றும் புகார்தாரர் நாராயணன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
Next Story