கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் : அரசியல் கட்சியினர்- அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துகட்சி கூட்டம் : அரசியல் கட்சியினர்- அதிகாரிகள் இடையே வாக்குவாதம்
x
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.  அதில்  அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட் அவுட்களை தானாக முன்வந்து அகற்ற வேண்டும், இனிவரும் காலங்களில் கட் அவுட் வைக்க விரும்புவோர் பேரூராட்சி மற்றும் காவல்துறை அனுமதியுடன் வைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், ஆளுங்கட்சியினரை தவிரை மற்ற கட்சியினரின் கட் அவுட்களை அதிகாரிகள் அகற்ற சொல்வதாக கூறி பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்