அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி
x
அ.தி.மு.க. தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.கவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கும் தே.மு.தி.கவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும், பா.ம.கவுக்கு இணையான தொகுதிகளை பெற தே.மு.தி.க முயற்சித்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ஆம் தேதி தங்கள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இல்லத்தில், அக்கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசனை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்