"இரு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

வாக்காளர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
இரு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்
x
வருகிற 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்களுக்கு வருகிற 23 மற்றும் 24 ஆம் தேதி மேலும் ஒரு வாய்ப்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இரண்டு நாட்களில், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்கல், திருத்துதல் மற்றும் தொகுதிக்குள்ளே இடம் மாறுதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என  கூறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை அதற்குரிய படிவங்களை பெற்று நிரப்பி தர வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்