எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு "மகாலட்சுமி" என பெயர் சூடல்...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர் சூடல்...
x
எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இன்று மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள தொடர் சிகிச்சை காரணமாக குழந்தையின் எடையும் ஒரு கிலோ கூடியுள்ளது. எனினும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை வரும் மார்ச் முதல் வாரம் பரிசோதிக்க உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்