"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்

இந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும் - குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் விருப்பம்
x
இந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில், மகாத்மா காந்தி சிலையை, அவர் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர்,  காந்திஜியின் சிலையை திறப்பதில் பெருமிதம் அடைவதாக கூறினார். தேச ஒற்றுமையை பலப்படுத்த நமது தலைவர்கள் மொழியை கருவியாக பயன்படுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், மொழி குறித்த மகாத்மா காந்தி சிந்தனையை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்றார். இந்தியை போல  மற்ற மாநில மொழிகளுக்கும் சபாக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்