தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை

5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு
தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை
x
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த குழுவில் கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனை குழு செயலாளர் செவந்தியப்பன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் செங்குட்டுவன், உயர்நிலைக்குழு சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்