ஒசூர் : ஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள் - ஏரியில் ஆனந்த குளியல் போட்டு கும்மாளம்

ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூர் : ஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள் - ஏரியில் ஆனந்த குளியல் போட்டு கும்மாளம்
x
ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் வாகனத்தில் தேன்கனிகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே 3 காட்டுயானைகள் நின்றது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் தாங்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கேயே நின்றனர். யானைகள் கடந்து சென்றதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த 7 காட்டுயானைகள் தண்ணீரை குடித்து ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்டன. 

Next Story

மேலும் செய்திகள்