மலேசியாவில் கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர்.
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 49 தொழிலாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றனர். ஆனால், அங்கு 49 பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதால் அவர்களை மீட்கக்கோரி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசு மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மனு அளித்தனர். இதனையடுத்து தூதரக நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்ட 49 பேரையும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தி.மு.க. எம்.பி கனிமொழி வரவேற்றனர்.
____________________________________________
Next Story