கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு
x
கொளுத்துவாஞ்சேரி பகுதியில்,  சதீஷ் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் வேலை செய்து வந்த ஐந்து சிறுவர்கள் உட்பட 11 பேர், நேற்று நள்ளிரவு 12 மணியளவில்,  அருகே உள்ள கிராமத்தில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து வந்த கோட்டாச்சியர் மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பல ஆண்டுகளாக அவர்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்ததும், ஒரு நாளில் 18 மணி நேரம் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்டவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், தொடர்ந்து செங்கல் சூளை உரிமையாளர் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்