தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்

பூந்தமல்லியில் தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்
x
பூந்தமல்லியில் தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே இரண்டு லாரிகளில் இருந்து லோடு ஆட்டோக்களுக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த  வட மாநில இளைஞர்கள், போலீசாரை கண்டதும் தப்பி சென்றுள்ளனர். அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், லாரியில் சோதனை மேற்கொண்டனர்.லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில்  குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜோதிந்திர தேவ், மிசன்பவேஷ்தான்  என்ற இருவரை போலீசாரை கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்