பள்ளிக்கு சீர்வரிசை அளித்த மக்கள் : ஊர்வலமாக கொண்டு வந்து ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்தாலும் ஒரு சில பொருட்கள் அரசால் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர். அதன் படி சேர், பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.
Next Story