13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்
x
இது தொடர்பான வழக்கில் திலகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள ஜெய்சங்கரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வருவாய்த்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்