அழகம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த மாசி தேர்திருவிழாவில், பெண்கள் மட்டும் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான தேரோட்டத்திலும் ஏராளமான பெண்கள் ஒன்று கூடி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேள தாளங்கள் முழங்க நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
Next Story