சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த குரங்கு குட்டி

அப்புறப்படுத்த விடாமல் குரங்கு கூட்டம் பாசப்போராட்டம்
சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த குரங்கு குட்டி
x
திருச்சி மணப்பாறையில் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த குரங்கு குட்டியின் உடலை அப்புறப்படுத்த விடாமல் குரங்குகள் கூட்டம் நடத்திய பாசப்போராட்டம் நெஞ்சை நெகிழ வைத்தது. அங்குள்ள குளித்தலை சாலையை கடக்க முயன்ற குட்டி குரங்கு ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த வழியே வந்த மாணவர்கள், அந்த குரங்கு குட்டியின் உடலை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் கூட்டமாய் திரண்ட குரங்குகள், அவர்களை மிரட்டும் வகையில் ஆக்ரோஷம் காட்டியதுடன், அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்தது. எனினும் அப்பகுதி மக்கள், ஒரு வழியாக அந்த குட்டி குரங்கின் உடலை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர். குரங்குகள் நடத்திய இந்தப் பாசப்போராட்டம் பார்ப்போரை நெகிழ செய்தது.

Next Story

மேலும் செய்திகள்