ஆளுநர் மாளிகையி​ல் கிரண்பேடி- நாராயணசாமி பேச்சுவார்த்தை

ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை
x
புதுச்சேரியில், இலவச அரிசி உள்ளிட்ட 39 திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்க கோரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 6 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்