வெட்டியவர்களுக்கு தைக்க வாய்ப்பு - திருச்சி மத்திய சிறை நிர்வாகம் அசத்தல்

திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் இரண்டு பேருக்கு தையல் கடை வைத்து கொடுத்து, சிறை நிர்வாகம் அசத்தியுள்ளது.
வெட்டியவர்களுக்கு தைக்க வாய்ப்பு - திருச்சி மத்திய சிறை நிர்வாகம் அசத்தல்
x
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த தாஸ் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாதேஸ்வரன் ஆகிய இருவரும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் சிறையில் தையல் தொழில் கற்று வந்துள்ளனர். கைதிகளின் திறனை கண்டு வியந்த சிறை நிர்வாகம், இருவருக்கும் தையல் கடை வைத்து கொடுத்து அசத்தியுள்ளது.  
முதற்கட்டமாக சிறைத்துறை காவலர்களின் சீருடைகளை தைக்க கைதிகளுக்கு துணிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் இங்கு வந்து துணி தைக்கலாம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்