ஐ.பி.எஸ் - ஐ.ஏ.எஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் - ஐ.ஏ.எஸ் அணி வெற்றி
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஐ.ஏ.எஸ் அணி வெற்றி பெற்றது
வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியை தமிழக தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் துவக்கி வைத்தனர். டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஐ.பி.எஸ் அணியினர், 25 ஒவர் முடிவில் 140 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் இறங்கி ஐ.ஏ.எஸ் அணியினர் 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர். தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்ற ஐ.ஏ.ஏஸ் அணியினருக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
Next Story