பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி - லாரியை நகர்த்தியதால் பெரும்விபத்து தவிர்ப்பு

ஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி - லாரியை நகர்த்தியதால் பெரும்விபத்து தவிர்ப்பு
x
அவல்பூந்துறையைச் சேர்ந்த மினி லாரி ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக எழுமாத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் வந்தது. அப்போது, லாரியில் திடீரென கரும்புகை கிளம்பியதால் பரபரப்பானது. அதைத் தொடர்ந்து, லாரியின் என்ஜின் பகுதியில் பயங்கர தீ பிழம்பு ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கொளுந்துவிட்டு எரியத் துவங்கியதால், வாகன ஓட்டுநர்கள் ஒன்றுகூடி அங்கிருந்து லாரியை வெளியில் தள்ளினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தப் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்