இறைவனிடம் கோரிக்கை மனு அளித்த சிவனடியார்கள்

கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள் இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
இறைவனிடம் கோரிக்கை மனு அளித்த  சிவனடியார்கள்
x
கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள்  இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், அந்த பணிகளை தொடங்கிய  அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தடைபட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இறைவனிடம் சமர்ப்பித்து வழிபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்