3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்

கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவியில் பதிவான மர்ம ஆசாமிகள்
x
கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும்  ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ம.பொ.சி நகரில் மூன்று வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அங்கு வசிப்போர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அங்கு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், 2 மர்ம ஆசாமிகள்,  அடுத்தடுத்து  3 வீடுகளின் பூட்டை உடைத்து, 6 சவரன் நகைகள், ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த புடவைகளையும் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்