கணவரை நினைத்து கதறும் கர்ப்பிணி மனைவி - நெஞ்சை உறைய வைக்கும் குடும்பத்தினரின் அழுகுரல்
நாட்டை காக்க சென்று வீர மரணமடைந்த, சிவசந்திரன், வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக அவரது தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த விவசாய தம்பதி சின்னையன்- சிங்காரவள்ளிக்கு, 2-வது பிள்ளையாக பிறந்தவர் சிவசந்திரன். எம்.ஏ., பி.எட் பட்டதாரியான இவர், தேச பற்று காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டு காந்திமதி என்ற பெண்ணை காதலித்து திருமண செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் சிவமுனி என்ற மகன் உள்ளார். மேலும், காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளால் தனது மகன் உயிர் திரும்ப வராது என்றும் நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக சிவசந்திரனின் தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார். சிவசந்திரனின் மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பு என்பதே நெஞ்சை உறைய வைக்கும் கசப்பான உண்மை.
Next Story