"மண்டல வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்" - அதிமுக

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டங்கள் மண்டலம் வாரியாக நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மண்டல வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் - அதிமுக
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, மண்டல வாரியாக, அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் 15ம் தேதி  முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் கட்சி நிர்வாகிகள்  எடுத்துரைத்துக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடை தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்து மண்டல வாரியாக அம்மா பேரவை நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்