போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்கு

நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது வழக்கு
x
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினரின் மகன் அல்ல என கூறி, நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்பு விசாரணைக்கு வந்தது.  பின்னர் மார்ச் மாதம் 4 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன், தம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்து,  தனுஷ் தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக புகார் தெரவித்தார். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் கதிரேசன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்