திருமண விழா பேனர் வைத்த‌தில் தகராறு : மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்

அரியலூரில் திருமணவிழா பேனர் வைத்த‌தில் இருதரப்பினர் இடையே எழுந்த மோதல், மருத்துவமனை வரை தொடர்ந்த‌தால், நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.
திருமண விழா பேனர் வைத்த‌தில் தகராறு :  மருத்துவமனையில் இருதரப்பினர் மோதல்
x
அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் கிராமத்தில்  திருமண வரவேற்பு பேனர் வைத்த‌தில், திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி முன்னாள் தலைவர் இளையராஜாவுக்கும்,  பண்ணை ராஜா என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இதில், படுகாயம் அடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையிலும் , இருதரப்பினர் இடையே அடிதடி சண்டை உருவானது. இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்