சந்தியா கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : தொடர்ந்து 7 வது நாளாக தேடுதல் வேட்டை

சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் 7 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தியா கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : தொடர்ந்து 7 வது நாளாக தேடுதல் வேட்டை
x
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக உடல் பாகங்களை வெட்டி வீசினார். இதில் 2 கால்கள் மற்றும் ஒரு கை பகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில், கொலை செய்த பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் இருந்து மற்றொரு உடல் பாகம் கிடைத்தது. ஆனால் இதுவரை உடல் பகுதி, மற்றொரு கை மற்றும் தலை கிடைக்காததால் அவற்றை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பொக்லைன் உதவியுடன் போலீசார் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் குப்பைக் கிடங்கில் 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் பாகங்கள் இன்னும் கிடைக்காததால் மேலும் 5 அடி தோண்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்