உடல் நலக்குறைவால் உயிரிழந்த மகன் - மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளியான இவர் கடந்த ஒருவாரமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அவர் உயிரிழக்க, குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஏழுமலையின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவரது தாய் கந்தாயியும் திடீரென உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் புதுப்பாளையம் கிராமம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story