சிவகாசியில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவகாசி அருகே 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசியில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்களில் பட்டாசு தொழில் மற்றும் பட்டாசு தொழிலாளர்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இன்று சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிலை நம்பி உள்ள சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக பட்டாசு தொழிலுக்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்