அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு உத்தரவு
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இது குறித்த அறிக்கையை வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story