ஜி.எஸ்.டி வரிச்சலுகை பெற போலி ரசீது : 9 பேரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
போலி ரசீது மூலம் ஜி.எஸ்.டி. மோசடியை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரிச்சலுகை பெற போலி ரசீதுகளை விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேர் மீது மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி 9 பேர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, அவர்களின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி நாட்டின் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்தும் இந்த மோசடிகளை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
Next Story