அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் - முதலமைச்சர் முன்னிலையில் செயல் விளக்கம்
அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பள்ளிகளில் ரோபோ பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story