அரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசை கண்டித்து சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் செங்குட்டுவேல், வரும் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும் பாலை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்