வரி உயர்வை கண்டித்து போராட்டம் : கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
கடலூரில், நகராட்சி அதிகாரிகளை சிறைப்பிடித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் 145 கடைகளின் வரியை, எந்தவித முன்னறிவிப்புமின்றி 15 மடங்காக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். இதனை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள், உடனடியாக அந்த தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறியதோடு, கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து, நகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story