திருவான்மியூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர் தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
திருவான்மியூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, தாய்மார்களுக்கு தனி அறை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து,  கிருஷ்ண‌கிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தங்கள் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷ்ண‌கிரி மற்றும் பெரம்பலூரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்