3 மகன்களுடன் விஷம் அருந்திய தாய் - 8 வயது இளைய மகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மதுபோதை கணவனின் தொல்லையால் தமது 3 மகன்களுடன் தாய் அரளி விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 மகன்களுடன் விஷம் அருந்திய தாய் - 8 வயது இளைய மகன் உயிரிழப்பு
x
தெற்கு விராலிப்பட்டியில் வசிக்கும் பாலமுருகன்- செல்வி தம்பதிக்கு   3 மகன்கள் உள்ளனர். தினமும் குடித்துவிட்டு வரும் பாலமுருகன், மனைவியுடன் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி பள்ளியில் இருந்து வீடுதிரும்பிய தமது 3 மகன்களுக்கும் அரளி விஷம் கொடுத்து தாமும் அருந்தியுள்ளார். சற்று  நேரத்தில் மகன்களின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அவர்களை நிலக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி செல்வியின் 8 வயது இளைய மகன் கதிரேசன் உயிரிழந்தான். மற்ற இருவர் அங்கு சிகிச்சைபெற்று வரும் நிலையில், தாய் செல்வி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்