திருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருநள்ளாறு : சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம்
x
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்