கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்க மாற்று கும்கி யானை சுயம்பு வந்தடைந்தது.
கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை
x
கண்ணாடிப்புத்தூரில் உள்ள கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை  விரட்ட கடந்த வாரம் கலீம், மாரியப்பன் என்ற கும்கி யானைகள்   வரவழைக்கப்பட்டன. அதன்படி நேற்று கரும்புத்தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பியை விரட்டும் முயற்சியில் இரு கும்கி யானைகளும் ஈடுபட்டன. இதில், மாரியப்பன் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் மாரியப்பன் யானைக்கு மாற்றாக  சுயம்பு என்ற கும்கி டாப்ஸ்லிப் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சின்னதம்பி யானைக்கு இணையான வயதுடைய சுயம்புவும் அனுபவமிக்க கலீமும் அதனை, வனத்துக்குள் அனுப்பும் என வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்