வீட்டிற்குள் புகுந்து வடமாநில பெண் மீது தாக்குதல் : 2 சவரன் நகை கொள்ளை...
சென்னை அமைந்தகரையில், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில பெண்ணை தாக்கி மர்மநபர்கள், 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபேஷ்குமார் மற்றும் அவரின் மனைவி அன்னபூரணி, என்.எஸ்.கே நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல், ஒரு மணி அளவில் வீட்டின் கதவை திறந்து வைத்துக் கொண்டு அன்னபூரணி, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அன்னபூரணி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகை பறித்துள்ளார் . இதனை தடுக்க முயன்ற அன்னபூரணியை கத்தியால் முகத்தில் வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், அன்னபூரணியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story