காதல் தோல்வி - செவிலியர் தற்கொலை...

காதல் தோல்வியால் தனியார் மருத்துவமனை செவிலியர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
காதல் தோல்வி - செவிலியர் தற்கொலை...
x
மன்னார்குடி அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த நிவேதா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். மருத்துவமனை மாடியில் இருந்த அறையில் தங்கி இருந்த நிவேதா,  கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிவேதாவின் அறை, நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததையடுத்து அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது நிவேதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் நிவேதா தனது சொந்த ஊரை சேர்ந்த ஒருவரை காதலித்த வந்ததாகவும் அதில் ஏற்பட்ட மனக்கசப்பில் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்