தண்ணீர் தேடி நகருக்குள் வந்த காட்டெருமைகள் : ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்...

நீலகிரியில் மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.
தண்ணீர் தேடி நகருக்குள் வந்த காட்டெருமைகள் : ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்...
x
நீலகிரியில் மழை இல்லாத காரணத்தினால்  வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால்,  உணவு மற்றும் தண்ணீருக்காக  நகருக்குள் ‌ப‌டையெடுக்கும் காட்டெருமைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னுார் லெவல்கிராஸ் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டெருமை, குன்னுார் மேட்டுப்பாளையம்  சாலையில் உலா வந்தது. இதை கண்ட வாகனஒட்டிகள் தங்களது வாகனங்களை விட்டு விட்டு ஒட்டம் பிடித்தனர். சுமார் 20 நிமிடம் அங்கு சுற்றித்திரிந்த காட்டெருமை பின்னர் மலை ரயில் பாதையில் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்